நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
X
By - N. Iyyasamy, Reporter |14 March 2022 5:13 PM IST
நீலகிரி மாவட்டத்தில் கேரட் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் கேரட் விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இங்கு விளையும் கேரட்டுகள் மேட்டுப்பாளையம் மட்டுமன்றி பிற மாநிலங்களான கேரளா, கர்நாடகாவிற்கும் நாள்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களாக கேரட் விலை சராசரியாக 30 முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கேரட் விலை அதிகரித்துள்ளது.
தற்பொழுது ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கேரட் கிலோ 65 ரூபாய் முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த விலை ஏற்றத்தால் கேரட் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu