/* */

நீலகிரியில் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு

மேலும் விபரங்களுக்கு 0423-2450340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

நீலகிரியில் மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு
X

பைல் படம்.

இந்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதுப்பித்தல், கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்கள் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உடனடியாக புதுப்பித்து அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.

புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமானச் சான்று சமர்ப்பிக்க அவசியமில்லை. ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் தற்போது விண்ணப்பிக்கலாம். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியுள்ள மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையதளத்தில் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0423-2450340 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் அம்ரித் தெரிவித்து உள்ளார்.

Updated On: 29 Nov 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது