/* */

கோடநாடு வழக்கு விசாரணையில் இன்று ஒருவர் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கார் விபத்தில் இறந்த கனகராஜின் நண்பர் குழந்தை வேலு என்பவரிடம் 5 மணி நேரம் விசாரணை.

HIGHLIGHTS

கோடநாடு வழக்கு விசாரணையில் இன்று  ஒருவர் ஆஜர்
X

பைல் படம்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பவம் தொடர்பாக ஏ.டி.எஸ்.பி. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுத்தரப்பு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், நாள்தோறும் உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஜம்சீர் அலி, ஜித்தின்ஜாய் ஆகிய இருவரும் இன்று ஆஜராக வாய்ப்பு இருந்த நிலையில் ஜம்சீர் அலிக்கு கொரோனா காரணமாகவும், ஜித்தின்ஜாயின் உறவினரின் திருமணம் என்பதால் இந்த இருவரும் இன்று ஆஜராகவில்லை.

போலீசார் அவர்களுக்கு குறிப்பிடும் தேதி கூறிய பிறகு இந்த விசாரணையில் இருவரும் ஆஜராக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் மதியம் 12 மணிக்கு சென்னையை சேர்ந்த குழந்தை வேலு என்பவரிடம் ஐ.ஜி சுதாகர், மாவட்ட எஸ்.பி ஆஷிஸ்ராவத் குன்னூர் டி.எஸ்.பி சுரேஷ் ஆகியோர் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இவர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விபத்தில் இறந்த கனகராஜுன் நண்பர் ஆவார். இவர்கள் சில காலம் ஒன்றாக ஒரே அறையில் தங்கியிருந்தவர்கள். இதனால் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் கனகராஜிடம் நெருக்கமாக இருந்தவர்கள் யார் என்பதும் குறித்து விசாரணை நடத்தினர்.

Updated On: 11 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. கலசப்பாக்கம்
    படவேடு பகுதியில் கனமழையால் வாழை தோட்டங்கள் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை புதிய பேருந்து நிலைய பணிகள்: கூடுதல் தலைமைச் செயலாளர்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்து ஆய்வு...
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு
  6. திருவண்ணாமலை
    திடீர் மழையால் குளிர்ந்த அக்னி ஸ்தலம், மக்கள் மகிழ்ச்சி
  7. வந்தவாசி
    சித்திரை மாத கிருத்திகை: வந்தவாசி அருகே 108 பால்குட ஊா்வலம்
  8. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  9. வீடியோ
    தீவிரவாதிகள் விவகாரத்தில் மீண்டும் அம்பலப்பட்ட Congress ! வைரலாகும்...
  10. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...