/* */

உதகையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்

உதகையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

உதகையில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்
X
உதகையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.

உதகையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவின் போது சென்னையில் திமுக கள்ள வாக்கு பதிவு செய்ததை கண்டித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்யப்பட்டார்.

இதனை கண்டித்து நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் உதகை ATC திடல் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத், நடைபெற்ற நகராட்சி தேர்தலில் சென்னையில் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் கள்ள ஓட்டு போட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.

இதனை தட்டிக் கேட்டதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது, திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்தது. கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவை சேர்ந்த நரேஷ் குமார் மீது பிடிவாரண்டு மற்றும் 12 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இதனை தட்டிக் கேட்காமல் ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது பல்வேறு வழக்குகள் பதிவுசெய்தனர்.

இதனைக் கண்டித்து உதகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியில் திமுக அரசை கண்டன கோஷங்களும் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஆர் அர்ஜுனன், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன் ஜெயசீலன், முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Updated On: 28 Feb 2022 9:37 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்