/* */

உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம்

சமுதாய பண்ணை பள்ளிகள் தொடங்குவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது

HIGHLIGHTS

உதகையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான ஆலோசனை கூட்டம்
X

உதகையில் சமுதாய பண்ணை பள்ளிகள் தொடங்குவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் உதகை , குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள 35 கிராம ஊராட்சிகளில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தியாளர் மற்றும் தொழில் குழுக்கள், சமுதாய திறன் பள்ளிகள், சமுதாய பண்ணை பள்ளிகள் தொடங்குவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் ஊட்டி கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அதன் பின்னர் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் 63 சுய உதவி குழுவை சேர்ந்த மகளிர் தொழில் முனைவோர்களுக்கு ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்ட கடன் உதவிகளை வழங்கினார்.

விவசாய உற்பத்தியாளர்களை குழுவாக ஒன்றிணைத்து உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உபரி விளைபொருட்களை திரட்டவும், உற்பத்தி செலவை குறைத்து வருமானத்தை பெருக்கவும், மதிப்புக்கூட்டு பொருட்களாக மாற்ற உற்பத்தியாளர்களை அமைப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

மேலும் வாழ்வாதாரம் ஏற்றம் பெற நீடித்த நிலையான வருமானம் பெற வழிவகைகள் குறித்து தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் மணிகண்டன் விளக்கினார்.

Updated On: 7 Oct 2021 7:55 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு