/* */

திமுக அரசை கண்டித்து உதகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்று கூறி, அரசை கண்டித்து உதகையில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

திமுக அரசை கண்டித்து உதகையில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் உரிமைகுரல் முழக்கப் போராட்டம் உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில், திமுக அரசை கண்டித்து இன்று உதகையில் உரிமைக்குரல் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. இதில், தேர்தலில் வாக்குறுதி அளித்து இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டி, திமுக அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தேர்தல் வாக்குறுதியில் குடும்பத்தலைவிக்கு மாதம் 1000, நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் கேஸ் விலை, நீட் தேர்வு ரத்து, என கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து இதுவரை நிறைவேற்றவில்லை இதை வன்மையாக கண்டிப்பதாக ஆர்பாட்டத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1500 கிளைகளிலும் இந்த உரிமை முழக்கம் போராட்டம் நடைபெற்று வருவதாக நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி வினோத் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் கே ஆர் அர்ஜூணன், முன்னாள் மாவட்ட கழக செயலாளர் பால நந்தகுமார், முன்னாள் நகர செயலாளர் கோபாலகிருஷ்ணன்,உட்பட கட்சியின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Updated On: 28 July 2021 9:07 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  2. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  4. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த
  5. ஈரோடு
    எடப்பாடி பழனிசாமி 70வது பிறந்தநாள்: பெருந்துறையில் சர்க்கரைப் பொங்கல்...
  6. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  7. தேனி
    வீரபாண்டி கோவில் திருவிழாவில் ஒரே நேரத்தில் 61 அக்னிசட்டி எடுத்த...
  8. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  9. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  10. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்