நீலகிரி: 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிகளில் விறுவிறு -501 பேர் வேட்பு மனு தாக்கல்

நீலகிரி: 4 நகராட்சிகள் 11 பேரூராட்சிகளில் விறுவிறு -501 பேர் வேட்பு மனு தாக்கல்
X
நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 நகராட்சிகளில் மொத்தம் 272 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 294 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. நேற்று வரை 102 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இன்று உதகை நகராட்சியில் 127 பேர், குன்னூர் நகராட்சியில் 67 பேர், கூடலூர் நகராட்சியில் 63 பேர், நெல்லியாளம் நகராட்சியில் 15 பேர் 4 நகராட்சிகளில் மொத்தம் 272 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

அதிகரட்டி பேரூராட்சியில் 19 பேர், பிக்கட்டி பேரூராட்சியில் 5 பேர், தேவர்சோலை பேரூராட்சியில் 49 பேர், உலிக்கல் பேரூராட்சியில் 10 பேர், ஜெகதளா பேரூராட்சியில் 15 பேர், கேத்தி பேரூராட்சியில் 19 பேர், கீழ்குந்தா பேரூராட்சியில் 6 பேர், கோத்தகிரி பேரூராட்சியில் 38 பேர், நடுவட்டம் பேரூராட்சியில் 23 பேர், ஓவேலி பேரூராட்சியில் 37 பேர், சோலூர் பேரூராட்சியில் 8 பேர் 11 பேரூராட்சிகளில் 229 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று மட்டும் 501 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை மொத்தம் 603 பேர் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future