உதகையில் 2 நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

உதகையில் 2 நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்
X

ஊட்டில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது.

உதகையில் தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2 நாள் ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.

நீலகிரி மாவட்ட கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் 2 நாட்கள் நடைபெற்றது.

பயிலரங்கில் ஆட்சிமொழி வரலாறு சட்டம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழிப்பயிற்சி, மொழிபெயர்ப்பு கலைச்சொல்லாக்கம், ஆட்சிமொழி செயலாக்க அரசாணைகள் மற்றும் ஆட்சிமொழி ஆய்வும், குறைகள் நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் என 100 பேர் கலந்துகொண்டனர். கருத்தரங்கில் பங்குபெற்ற அலுவலர்கள் பெற்ற அனுபவத்தையும், தமிழின் முக்கியத்துவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் சார்பில் தமிழ் மேன்மை குறித்த கவிதை வாசிக்கப்பட்டது. தமிழில் சிறந்த வரைவுகள், குறிப்புகள் எழுதிய அரசு பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பயிலரங்கில் திருச்சி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் சிவசாமி, மாவட்ட உதவி இயக்குனர் சம்சுதீன், சேலம் மாவட்ட உதவி இயக்குனர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story