/* */

உதகையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: தேங்கும் குப்பையால் கப்ஸ்

உதகையில், ஊதியம் கேட்டு, 3 நாட்களாக பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கழிவுகள் தேங்கியுள்ளன.

HIGHLIGHTS

உதகையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்: தேங்கும் குப்பையால் கப்ஸ்
X

உதகையில், தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், பல இடங்களில் குப்பைகள் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது.

உதகையில், தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த ஜூன் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், 300க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, உதகை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுநாள் வரையில் சம்பளம் வழங்கப்படாததால் நகர்புறம், நகரில் உள்ள 36 வார்டுகளிலும் தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதன் காரணமாக, குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. நகர்புறத்தில் பல பகுதிகளில் சாலையோரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் வீசத் துவங்கியுள்ளது. இதனால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

சம்பளம் வழங்கினால் மட்டுமே பணியை தொடருவோம் என தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், விரைவில் அவர்களது கோரிக்கையை நிறைவேற்றி, நகரின் தூய்மைக்கு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 26 July 2021 2:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  4. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  5. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  6. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  7. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  8. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  9. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!