உறைபனியால் புற்கள் கருகாமலிருக்க ஏற்பாடு

உறைபனியால் புற்கள் கருகாமலிருக்க  ஏற்பாடு
X

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உறை பனியிலிருந்து புற்களை பாதுகாக்க ஸ்பிங்லர் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

கடந்த வாரத்தில் இருந்து தற்போது வரை உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் உறைபனி நிலவி வருகிறது. உறைபனி காரணமாக தேயிலை தோட்டங்கள் விவசாய நிலங்கள், புல் மைதானங்கள் என அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா, புல் மைதானம் கோடை சீசனுக்காக தயார்படுத்தப்பட்டு வரும் நிலையில் உறைபனியில் இருந்து புற்களை பாதுகாக்க தோட்டக்கலைத்துறை சார்பில் ஸ்பிங்லர் மூலம் நீர்பாய்ச்சி, புற்கள் கருகாமலிருக்க பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
ai marketing future