/* */

பிபின் ராவத்திற்கு அஞ்சலி: நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

பிபின் ராவத்திற்கு அஞ்சலி: நீலகிரி மாவட்டத்தில் இன்று கடையடைப்பு
X

நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். நாட்டையே நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த விபத்தில், உயிரிழந்தவர்களுக்கு, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில், 13 ராணுவ வீரர்களின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, உதகை, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகளை அடைத்து வியாபாரிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி, மாவட்டத்தில் கடைகள், ஓட்டல்கள் உள்பட வணிக நிறுவனங்கள் அனைத்தும் இன்று காலை முதல் அடைக்கப்பட்டுள்ளன; இன்று மாலை 6 மணிக்கு பிறகே கடைகள் திறக்கப்படும்.

இதுதவிர வியாபாரிகள் சங்கம் சார்பில் பிபின் ராவத் உள்ளிட்டோரின் வீரமரணத்திற்கு ஊர்வலகமாகச் சென்று அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்ட கடைப்பகுதிகள், வெறிச்சோடியுள்ளன.

Updated On: 10 Dec 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  3. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  4. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  6. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!
  9. லைஃப்ஸ்டைல்
    காத்திருப்பது என்பது பொறுமையைப் பெறுவதற்கான ஒரு வழி
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ணன் கொண்ட தோழமைக்காக ஆவி தன்னைத் தந்தானே! அது தான் நட்பின்...