/* */

உதகையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆட்சியரிடம் மனு

கொரோனா பேரிடர் காலம் , சுற்றுலா தலங்கள் மூடல் உள்ளிட்டவைகளால் கடும் பாதிப்படைந்துள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை.

HIGHLIGHTS

உதகையில் சுற்றுலா வாகன ஓட்டிகள் ஆட்சியரிடம் மனு
X

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தங்கள் ஆவணங்களை ஆட்சியரிடம் ஒப்படைப்பதாக சுற்றுலா வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட தூரத்தை விட ஆட்டோக்கள் இயக்குவதாலும் சொந்த வாகனங்கள் மூலம் வாடகைக்கு செல்வோரும் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடுவதாலும் நெருக்கடியான சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளதாகவும் சுற்றுலா வாகன ஓட்டிகள் தெரிவித்தனர் .

கொரோனா பேரிடர் காலம் துவக்கத்தில் இருந்து இன்று வரை சுற்றுலா பயணிகள் வருகை தடைபட்ட காரணத்தால் மேக்சி கேப் வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் காலாண்டு வரி முழுமையாக ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன .

மேலும் சுற்றுலாவை நம்பியே இந்த மாவட்டத்திலுள்ள தாங்கள் முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்துள்ளதாகவும் தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தங்களிடம் உள்ள ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளோம் என கூறினர்.

Updated On: 28 April 2021 6:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?