/* */

குன்னூரில் தேயிலைத் தோட்ட தொழிலாளியை தாக்கிய காட்டெருமை

குன்னூரில், தேயிலை தோட்டத்தில் ஒருவரை காட்டெருமை கழுத்தில் குத்தி தூக்கி வீசிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

குன்னூரில் தேயிலைத் தோட்ட தொழிலாளியை தாக்கிய காட்டெருமை
X

காட்டெருமை தாக்கியதில் படுகாயமடைந்த ராஜேந்திரனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் 65% வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்குள்ள காடுகளில் யானை, கரடி, சிறுத்தை , காட்டுமாடுகள், செந்நாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. அவை அவ்வப்போது உணவு தேடியும், தண்ணீருக்காகவும் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வெளியே நடமாடும் வனவிலங்குகள், சில நேரங்களில் மனிதர்களை தாக்குவதால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள நான்சச் தேயிலை எஸ்டேடில் கண்காணிப்பாளராக பணிபுரியும் 58 வயது ராஜேந்திரன் என்பவரை, திடீரென்று காட்டெருமை தாக்கி தூக்கிவீசியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது

கழுத்தில் காயமடைந்து ரத்தம் அதிகளவு வெளியேறிய நிலையில், ராஜேந்திரனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டெருமை தாக்குவது தொடர் கதையாக உள்ளதால், வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

.

Updated On: 9 July 2021 12:49 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  2. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  4. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  5. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  8. ஈரோடு
    வாக்கு எண்ணிக்கை அன்று கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான...
  9. தொழில்நுட்பம்
    ஐக்யூ Z9x 5G: இளைஞர் மனம் கவர்ந்த புதிய ஸ்மார்ட்போன்
  10. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!