/* */

குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: வாழைகள் சேதம்

குன்னூர் குடியிருப்பு பகுதிகளில் இரவில்ஒற்றை காட்டுயானை உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குன்னூர் அருகே கிராமத்தில் புகுந்த காட்டு யானை: வாழைகள் சேதம்
X

சேதமடைந்த வாழை மரங்கள்.

மஞ்சூர் கெத்தை வனப்பகுதியிலிருந்து வெளியேறிய காட்டுயானை குன்னூர் அருகேயுள்ள தூதூர்மட்டம் கீழ் டெரேமியா கிராமத்திற்குள் புகுந்து அங்கிருந்த வாழைமரங்களை நாசம் செய்தது. மேலும், இரவில் குடியிருப்பிற்குள் ஒற்றை காட்டுயானை உலா வருவதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் காட்டுயானையை விரட்ட நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த வாரம் இந்தப் பகுதியில் 4 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குட்டியுடன் முகாமிட்டு இருந்தன. அதனை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர். தற்போது மீண்டும் ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளதால் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 20 Aug 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்