/* */

குன்னூர் நகரில் உலா வந்த காட்டு எருமை

குன்னூரில் இரவில் குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக உலா வந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குன்னூர் நகரில் உலா வந்த காட்டு எருமை
X

நகருக்குள் உலா வரும் காட்டு எருமை.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் அண்மைக்காலமாக காட்டு எருமைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு மற்றும் சாலைகளில் காட்டெருமைகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது . இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு எருமை வழிதவறி குன்னூர் நகர பகுதியில் அதிக மக்கள் வசிக்ககூடிய ரெய்லி காம்போண்ட், மாடல்ஹவுஸ் பகுதியில் அங்கும் இங்கும் உலா வந்தது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் காட்டு எருமை உலா வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த பகுதியில் உள்ள இளைஞர்கள் காட்டு எருமையை விரட்டியும், அங்கு இருந்து செல்லாமல் அந்த பகுதியில் உள்ள குழந்தைகள் பூங்காவுக்குள் காட்டெருமை புகுந்து முகாமிட்டுள்ளது. இந்த சம்பவத்தால் சுமார் 2 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 Sep 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  2. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  3. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  4. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. நாமக்கல்
    சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    ப.வேலூர் டவுன் பஞ்சாயத்து சார்பில் பொதுமக்களுக்கு தண்ணீர் பந்தல்...
  9. நாமக்கல்
    கூட்டுறவு சங்கத்தில் ரூ.1.17 கோடி மோசடி: செயலாளர் உட்பட 2 பேர் கைது
  10. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு