/* */

சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோவில் கைது

சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாதது தெரிய வந்ததை அடுத்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது

HIGHLIGHTS

சிறுமியை திருமணம் செய்த நபர்  போக்சோவில் கைது
X

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே கோத்தகிரியில் சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் போலீஸார் கைது செய்தனர்.

கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் உள்ள பெட்டமந்து பகுதியை சேர்ந்த நித்தேஷ்குட்டன்(22,) என்பவருக்கும் ஊட்டி தலைகுந்தா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் பெற்றோர் திருமணத்திற்கு நிச்சயம் செய்துள்ளனர்.

ஆனால், கர்ப்பிணியான அந்த சிறுமியை பிரசவத்திற்காக ஊட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில், சிறுமிக்கு 18 வயது பூர்த்தி அடையாதது தெரிய வந்ததை அடுத்து ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து, நித்தேஷ்குட்டன் மீது குழந்தை திருமண சட்டம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில், நித்தேஷ்குட்டனுக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக ஊட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர்.

Updated On: 21 Nov 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு