/* */

4 மாத ஊதியம் வழங்க வேண்டி தற்காலிக பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை

4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு தற்காலிக பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

4 மாத ஊதியம் வழங்க வேண்டி தற்காலிக பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகை
X

நான்கு மாத சம்பளம் வழங்காததை கண்டித்து குன்னூர் நகராட்சியை முற்றுகையிட்ட தற்காலிக பணியாளர்கள்

குன்னூரில் நகராட்சி பகுதிகளில் வீடுவீடாக சென்று கொரோனா பரிசோதனை மற்றும் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட நபர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து ஊழியர்கள் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளிலும் கொரோனா பேரிடர் காலத்தில் வீடு வீடாக சென்று வெப்பநிலை மற்றும் ஆக்ஸிஜன் அளவு போன்ற பரிசோதனைகள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளுவதற்காக நகராட்சி சுகாதார அதிகாரிகள் சார்பாக 120 நபர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனர். பரிசோதனை செய்யப்படும் நபர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், உடல்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகளால் இவர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

இதில் நிரந்தர பணியாளர்கள் செய்யக்கூடிய பணிகளும் இவர்கள் செய்து வந்தனர். ஆனால் கடந்த 4 மாதங்கள் ஆகியும் இதுவரை இவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேலும் அதிகாரிகளுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பணியமர்த்தியுள்ளதாகவும், மீதமுள்ள 100 மேற்பட்டவர்களுக்கு நிலுவை தொகை வழங்காமல் பணியிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று ஏராளமான பெண்கள் நகராட்சி அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு குன்னூரில் ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர் ஓரிரு நாட்களில் இவர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பள தொகையை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு நகராட்சி ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 7 Sep 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது