ஒரே வாரத்தில் எகிறிய தேயிலை துாள் விலை; உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

ஒரே வாரத்தில் எகிறிய தேயிலை துாள் விலை; உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி
X

குன்னுாரில் தேயிலை துாள் மொத்த வருமானத்தில்,  இந்த வாரம் 2.61 கோடி ரூபாய் அதிகரித்தது. 

தேயிலை மொத்த வருமானத்தில், கடந்த வாரத்தை விட, இந்த வாரம் 2.61 கோடி ரூபாய் அதிகரித்ததால், உற்பத்தியாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடப்பாண்டின் 32வது தேயிலை ஏலம் நடந்தது. அதில் 16.10 லட்சம் கிலோ இலை ரகம்; 5.10 லட்சம் கிலோ 'டஸ்ட்' ரகம் என மொத்தம் 21.20 லட்சம் கிலோ தேயிலை துாள் ஏலத்துக்கு வந்தது.அதில் 14.14 லட்சம் கிலோ இலை ரகமும், 4.64 லட்சம் கிலோ டஸ்ட் ரகம் என 18.78 லட்சம் கிலோ விற்பனையானது; 16.51 கோடி ரூபாய் மொத்த வருமானம் கிடைத்தது. சராசரி விலை கிலோவுக்கு 87.93 ரூபாயாக இருந்தது.

ஒரே வாரத்தில் 1.61 லட்சம் கிலோ வரத்து அதிகரித்தது. கடந்த வாரம் நடந்த 31வது ஏலத்தை விட இந்த ஏலத்தில் 2 லட்சத்து 96 ஆயிரத்து 826 கிலோ கூடுதலாக விற்று ஏற்றம் கண்டது.ஒரே வாரத்தில் 2.61 கோடி ரூபாய் மொத்த வருமானம் அதிகரித்துள்ளதால் தேயிலை துாள் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!