Begin typing your search above and press return to search.
குன்னூரில் குடியிருப்பில் புகுந்த கரடிகளால் பரபரப்பு
குடியிருப்புகளுக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
HIGHLIGHTS
குன்னூர் அருகே சின்ன உபதலை கிராமத்துக்குள் நள்ளிரவில் 2 கரடிகள் புகுந்தன. ஒரு வீட்டுக்குள் புகுந்த கரடி உணவு பொருட்கள் ஏதேனும் உள்ளதா என்று தேடியது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் சத்தம் போட்டபடி வீட்டின் கதவை திறந்து வெளியே வந்தனர். வீட்டுக்குள் சென்ற கரடி வெளியே ஓடி வந்தது. பின்னர் 2 கரடிகளும் அங்கிருந்து சென்றன. குடியிருப்புகளுக்குள் அடிக்கடி கரடிகள் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.