குன்னூர்: விதிமீறி செயல்பட்ட செல்போன் கடைக்கு சீல்

குன்னூர்: விதிமீறி செயல்பட்ட செல்போன் கடைக்கு சீல்
X

செல்போன் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்த போது.

உதகை அருவங்காடு ஜெகதளா பேரூராட்சியில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட செல்போன் கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்...

கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டும் திறந்திருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மற்ற வணிகம் சார்ந்த கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் உதகை அருவங்காடு ஜெகதளா பேரூராட்சியில் செயல் அலுவலர் நட்ராஜ் தலைமையில் விதியை மீறி கடைகள் செயல்படுகிறதா என நாள்தோறும் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் விதியை மீறி செயல்பட்ட செல்போன் கடையை அதிகாரிகள் கண்டறிந்து சீல் வைத்து அபராதம் விதித்தனர்.

தொடர்ந்து ஊரடங்கு மீறி வணிகரீதியாக கடைகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அதிகாரிகள் கடைகள் திறந்திருப்பது கண்டறியப்பட்டால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture