/* */

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது

நீலகிரி மாவட்டம், குன்னூரில் தனியார் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் கைது.

HIGHLIGHTS

குன்னூரில் பள்ளி மாணவிக்கு கத்தி குத்து: வாலிபர் கைது
X

குன்னூரில் தனியார் பள்ளிக்கு சென்ற 12 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திய வாலிபர் ஆசிக்கை பொதுமக்கள் மடக்கி பிடித்து கட்டி வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் தனியார் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு மூன்று இடங்களில் கத்திக்குத்து. குன்னூர் அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை. கத்தியால் குத்தியவனை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு. காவல் துறை விசாரனை

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரப் பகுதியான ஒய்எம்சியே அருகில் இயங்கி வரும் தனியார் பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவியை பின் தொடர்ந்து சென்ற வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் தலை, மார்பு, வயிறு என மூன்று இடங்களில் குத்தியதில் மாணவி அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து வாலிபனை பிடித்து கைகால் கட்டி மேல் குன்னூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மாணவியை குன்னூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாலிபரை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது, குன்னூரை சேர்ந்த அப்பாஸ் என்பவரின் மகன் ஆசிக் (26) என்பதும், இவன் மது, கஞ்சா போன்றவைகளுக்கு அடிமை என்றும் மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாகவும் தெரியவந்தது. இதுகுறித்து மேல் குன்னூர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இன்று காலையில் பள்ளிக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவியை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 April 2022 5:47 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  2. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  3. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  4. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  6. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  8. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  9. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  10. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி