/* */

குன்னூரில் கனமழையால் சிம்ஸ் பூங்காவில் அழுகும் நிலையில் பூக்கள்!

குன்னூர் கன மழையால் சிம்ஸ் பூங்காவில் உள்ள பூக்கள் அனைத்தும் அழுகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குன்னூரில் கனமழையால் சிம்ஸ் பூங்காவில் அழுகும் நிலையில்  பூக்கள்!
X

அழுகும் நிலையில் சிம்ஸ் பூங்கா பூக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான தலங்களில் ஒன்றாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜனவரி முதல் வாரத்தில் கோடை சீசனுக்கு சுமார் 3.10 லட்சம் பல்வேறு மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தும் பூக்க துவங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வந்து செல்லும் நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை உத்தரவு அமலில் உள்ளதால் பூங்கா பொலிவிழந்து காணப்பட்டுவந்தது‌.

தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூக்கள் அனைத்தும் அழுக துவங்கியுள்ளது. பல மாதங்கள் சிரமம் அடைந்து பூக்களை பராமரித்து தற்போது யாரும் பார்க்க முடியாமல் அழுகி போவதை கண்டு பூங்கா ஊழியர்கள் கவலையடைந்துள்ளனர்.

Updated On: 17 May 2021 1:50 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அன்னையர் தினத்தையொட்டி இலவச கண் சிகிச்சை முகாம்
  7. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  8. இந்தியா
    நன்கொடை வழங்கியதில் இந்திய அளவில் இவர் தான் நம்பர் ஒன் பெண்மணியாம்
  9. இந்தியா
    தண்ணீர் சேமிப்பிற்காக சர்வதேச விருது பெற்ற இந்திய பெண் கர்விதா...
  10. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை