/* */

கோத்தகிரியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், நேற்றிரவு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட தாசில்தார் அலுவலகத்திற்கு பட்டா மாற்றம், சிட்டாவில் பெயர் சேர்த்தல், அனுபோகச்சான்று, நில உரிமைச் சான்று, நில உட்பிரிவு செய்தல் மற்றும் பல்வேறு சான்றிதழ்கள் பெற, ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெறுவதற்காக வட்டாட்சியர் கையொப்பத்துடன் கூடிய அனுபோகச் சான்று பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அனுபோகச் சான்றிதழ் வழங்குவதற்காக அதிகாரிகள், பல ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெறுவதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி இடைத்தரகர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வருவதாகவும், நீலகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தைக் கண்காணித்து வந்தனர். அதை தொடர்ந்து நேற்றிரவு லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Updated On: 21 July 2021 2:36 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  4. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  7. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  9. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  10. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!