/* */

கோத்தகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை

மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

கோத்தகிரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை
X

நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையம். 

கோத்தகிரி அருகே உள்ள நெடுகுளா பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. நெடுகுளா, கேர்க்கம்பை, மிளிதேன், பேரகனி, கொட்டநள்ளி, சுண்டட்டி முதலான பத்து கிராம பொதுமக்கள் தங்களின் மருத்துவ சேவையை பூர்த்தி செய்து கொள்ள நெடுகுளா ஆர்மப சுகாதார நிலையத்திற்கு தான் வரவேண்டும்.

இந்நிலையில் நேற்றைய தினம் மிச்சியம்மாள் என்ற மூதாட்டிக்கு இரவு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற நிலையில் இரவு நேர மருத்துவர் மற்றும் செவிலியர் இல்லாததால் மூதாட்டியை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

எனவே நெடுகுளா ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நிரந்தர மருத்துவர் மற்றும் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் எனவும்,108 ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 3 Dec 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...