/* */

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

குன்னூரில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குன்னூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்
X

குன்னூரில், தடையை மீறி விற்பனைக்காக எடுத்து வந்த குடிநீர் பிளாஸ்டிக் பாட்டிலை, அதிகாரிகள் பறிமுதல் செய்து 5000 ரூபாய் அபராதம் விதித்தனர்,

நீலகிரியில், ஒருமுறை பயன்படுத்தும் கப், குடிநீர் மற்றும் குளிர்பானங்கள் அடைத்து விற்கப்படும் 'பிளாஸ்டிக்' பாட்டில்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு முன், வன விலங்குகள் நலன் கருதி, பாலியஸ்டர் மற்றும் நைலான் பைகளை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பயன்படுத்த தடை உள்ளது. விதிகளை மீறி விற்போரை, அந்தந்த உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள் கண்காணித்து, வருகின்றனர்.

இந்நிலையில், இன்று குன்னூரில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் சுரேஷ் மற்றும் குன்னூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மால் முருகன் உள்ளிட்ட குழுவினர், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை சப்ளை செய்த நபரின் ஆட்டோவை, வெலிங்டன் காவல்துறை காவலர்கள் முன்னிலையில் பறிமுதல் செய்தனர். அத்துடன், தடையை மீறியதற்காக, ரூ 5000/- அபராதம் விதிக்கப்பட்டது. தடையை மீறி விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 16 Sep 2021 6:19 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...