/* */

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 1 லட்சத்து 70 ஆயிரம் நாற்றுகள் நடவு பணி தீவிரம்

இரண்டாம் கட்ட சீசனுக்காக குன்னூர் சிம்ஸ்பூங்காவில், 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளை நடவு செய்வதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் கோடைசீசனையொட்டி செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2 ஆம் கட்ட சீசன் நடைபெறுவது வழக்கம். இதனை காண, லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோடை சீசன் முழுமையாக ரத்து செய்யப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகளின்றி அனைத்து சுற்றுலா தலங்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன.

தற்போது நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான பூங்காக்கள் விரைவில் திறக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளதால், குன்னூர் சிம்ஸ்பூங்காவில் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த சால்வியா, டேலியா, ஆன்தூரியம், மேரிகோல்டு உட்பட 200 வகைகளை சேர்ந்த, 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் நாற்றுகளை தயார் படுத்தும் பணியில் பூங்கா ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

பூங்காவில் உள்ள புல்வெளிகளை சமன் செய்தல், வர்ணம் பூசுதல், மலர் செடிகளை பராமரிப்பு செய்தல் போன்ற பணிகளை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 7 July 2021 12:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நல்லெண்ணெய்ய இப்படி யூஸ் பண்ணா முகம் சும்மா ஜொலிஜொலி..!
  2. சிவகாசி
    காரியாபட்டி அருகே, சீலக்காரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    உலகில் எந்தெந்த நாட்டு காவல்துறைக்கு காக்கி யூனிஃபார்ம் தெரியுமா?
  4. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே, பலத்த மழையால், விலை போகாத வெள்ளரிக்காய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு நிறைந்த வாழ்க்கைத் துணைவர்களுக்கு திருமணநாள் வாழ்த்துகள்..!
  6. திருமங்கலம்
    ஆபத்தை உணராமல் வைகை ஆற்றில் குளியல் : மாவட்ட நிர்வாகம் கண்டு
  7. அண்ணா நகர்
    சென்னையில் ஜாபர் சாதிக் மனைவியிடம் அமலாக்க துறை அதிகாரிகள் நேரடி...
  8. லைஃப்ஸ்டைல்
    சமையல் அறையில் கை 'சுட்டதா'? என்ன செய்வது?
  9. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  10. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு