/* */

நீலகிரி எல்லை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

இதில் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், போலீசார் கலந்துகொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி எல்லை பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X

எல்லையோர கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் கூட்டம்.

நீலகிரி மாவட்ட எல்லையோர கிராமங்களில் வசித்து வரும் பழங்குடியின மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

மஞ்சூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிண்ணக்கொரை, கொலக்கம்பை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைப்பள்ளம், கோத்தகிரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட மெட்டுக்கல், கம்பையூர், பாவியூர், கோழிகுட்டை, மசினகுடி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆனைகட்டி, நியூ கோப் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாரதி நகர், அய்யப்பன்மட்டம், செல்வபுரம், தேவாலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கூடமூலா மற்றும் 10 நம்பர் பனியர் காலனி ஆகிய கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்பட்டது.

இதில் அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டு பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 235 மனுக்கள் பெறப்பட்டது. முகாமில் 418 பழங்குடியின மக்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 27 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்