குன்னூரில் இரவு நேரத்தில் உலா வந்த சிறுத்தை: மக்கள் அச்சம்
குன்னூரில் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை வந்து சென்றது, கேமிராவில் பதிவாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது .குறிப்பாக காட்டெருமை, கரடி சிறுத்தை போன்ற விலங்குகள் உணவைத்தேடி, குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றன.
குன்னூர் அருகே உள்ள கரோலினா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது. அங்கிருந்து இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று கடந்த சில நாட்களாக வளர்ப்பு நாய் மற்றும் கோழிகளை வேட்டையாடி வந்தது. இந்நிலையில் பொது மக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதியில் சிறுத்தை உலா வந்த காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது,
இச்சம்பவம், கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் இரவு நேரங்களில் பணி முடிந்து செல்பவர்கள், அச்சத்துடன் சென்று வருவதாகவும், உயிர்ச்சேதம் ஏற்படுவதற்கு முன்பு, வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu