/* */

குன்னூரில் செயல்பட்டு வந்த தொழிலாளர் ஆணைய அலுவலகம் இடமாற்றம்

குன்னூரில் செயல்பட்டு வந்த தொழிலாளர் ஆணையம் அலுவலகம், ஈரோட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குன்னூரில் செயல்பட்டு வந்த தொழிலாளர் ஆணைய அலுவலகம் இடமாற்றம்
X

நீலகிரி மாவட்டம், குன்னூர் பெட்போர்டு பகுதியில் இயங்கி வந்த நீலகிரி, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கான மண்டல தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகம், அரசு உத்தரவுப்படி இடமாற்றம் செய்யப்பட்டு, கடந்த 1-ந் தேதி முதல் ஈரோடு, சென்னிமலை ரோட்டில் அரசினர் தொழிற்பயிற்சி மையம் பின்புறம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகத்தில் நிரந்தரமாக செயல்பட்டு வருகிறது.

எனவே, நீலகிரி மாவட்ட மக்கள், இனிவரும் காலங்களில் தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பணியாளர் இழப்பீட்டு சட்டம் கீழான வழக்குகளும் மற்றும் இதர தொழிலாளர் நலச் சட்டங்கள் கீழான வழக்குகளும், மேற்காணும் முகவரியில் தாக்கல் செய்யலாம்.

பொதுமக்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் இதர தனியார் வணிக நிறுவனங்கள் மேற்காணும் முகவரியில் செயல்படும் தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்தை அணுகி தேவைப்படும் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்), சதீஷ்குமார் தெரிவித்து உள்ளார்.

Updated On: 5 Nov 2021 8:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  3. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  6. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  7. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  8. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  9. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...
  10. திருவள்ளூர்
    பெரியபாளையம் அருகே எண்ணெய் ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி...