/* */

ஹெலிகாப்டர் விபத்திற்கு உயர்மின் அழுத்த கம்பிகள் காரணம் இல்லை: மின்வாரியம்

ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் உயர்மின் அழுத்த கம்பிகள் இல்லை என மின்சார துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது .

HIGHLIGHTS

ஹெலிகாப்டர் விபத்திற்கு உயர்மின் அழுத்த கம்பிகள் காரணம் இல்லை: மின்வாரியம்
X

விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த ராணுவ அதிகாரிகள்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் பலத்த தீ காயத்துடன் மீட்கப்பட்ட விமானி வருண் சிங் சிகிச்சைகாக பெங்களூருவில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் நேற்று சிகிச்சை பலனிறி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க நீலகிரி மாவட்ட ஏடிஎஸ்பி முத்து மாணிக்கம் தலைமையில் விசாரணை குழு அமைக்கபட்டுள்ளது. அந்த குழு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான உடன் மீட்பு பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் , 108 ஒட்டுநர்கள், தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் உள்பட பலரிடம் சாட்சி விசாரணை நடைப்பெற்று வருகிறது.

குறிப்பாக குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு முன்பு கடைசியாக படம் பிடித்த கோவையை சார்ந்த நாசர் என்பவரின் செல்போனை பறிமுதல் செய்த காவல்துறையினர், கோவை தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும் அப்பகுதியில் மின் கம்பங்கள் ஏதேனும் சேதமடைந்துள்ளதா? உயர் மின் அழுத்த கம்பிகள் அந்த வழியில் உள்ளதா என்ற விவரத்தை கேட்டு நீலகிரி மாவட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு கடந்த 11-ம் தேதி கடிதம் அனுப்பியது.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து, காவல்துறைக்கு விளக்கம் அளித்து உள்ளனர். அதில், ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட உடன் நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அங்கு உயர் மின்னழுத்த மின்கம்பங்கள் இல்லை. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை லாஸ் பால்ஸ் நீர்வீழ்ச்சி அருகே தான் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்கிறது.

விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியில் தெருவிளக்குடன் கூடிய மின்கம்பம் மற்றும் மின்கம்பிகள் சேதம் அடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தில் பகல் நேரத்தில் மின்சாரம் இருக்காது. மாலை 6 மணிக்கு மேல் தானியங்கி மூலம் தெருவிளக்கு எரிய மின் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது என்பது உட்பட 13 கேள்விகளுக்கு மின்சார துறை மூலம் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

தனிப்படை போலீசார் இதுவரை 80 -பேரிடம் விசாரணை செய்துள்ளனர் . இதனால் ஹெலிகப்டர் விபத்து குறித்த போலிசாரின் விசாரணை விரிவுபடுத்தபட்டுள்ளது.

Updated On: 16 Dec 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!