/* */

கோத்தகிரியில் விதிமீறி கூட்டம் கூட்டிய திருமண மண்பத்திற்கு அபராதம்

கோத்தகிரியில் கொரோனா விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் அதிகமானோர் பங்கேற்றதால் திருமண மண்டபத்திற்கு 10,000 அபராதம் விதிக்கப்பட்டது

HIGHLIGHTS

கோத்தகிரியில் விதிமீறி கூட்டம் கூட்டிய திருமண மண்பத்திற்கு அபராதம்
X

கொரோனா பரவல் காரணமாக தொற்று பரவாமல் தடுக்கும் விதத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கோத்தகிரி தாலுக்காவிற்குட்பட்ட ஜெகதளா ஒசட்டி கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இடைவெளியை கடைபிடிக்காமல் 50 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றதாக தெரிகிறது.

இது குறித்து தகவலறிந்து கோத்தகிரி தாசில்தார் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர்,கிராம உதவியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்ட போது விதிமுறைகளை மீறி திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல், அதிக பொதுமக்கள் பங்கேற்றது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மண்டப உரிமையாளருக்கு ரூ.10,000 அபராதம் விதித்து வருவாய் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

தொடர்ந்து இது போல் சுபநிகழ்ச்சிகளில் கொரானா கட்டுப்பாடுகளை கடைபிடிக்கவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 11 Sep 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  3. காஞ்சிபுரம்
    திருப்புலிவனம் உடற்பயிற்சி கூடத்தில் உபகரணங்கள் மாயம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    தனிமையின் வலி – ஆழம் நிறைந்த தமிழ் மேற்கோள்கள்!
  5. ஈரோடு
    ஈரோட்டில் பெண்களுக்கான இலவச ஆரி எம்ப்ராய்டரி பயிற்சி மே.20ல் துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெறுப்பு: ஒரு தவிர்க்க இயலாத உணர்வு தான்! அதை எப்படி எதிர்கொள்வது?
  7. காஞ்சிபுரம்
    ஸ்ரீபெரும்புதூர் அருகே மர்மமான முறையில் எரிந்த இரண்டு ஜேசிபி...
  8. மேட்டுப்பாளையம்
    குளம் போல் காட்சியளிக்கும் பெரியநாயக்கன்பாளையம் மேம்பாலம்: வாகன...
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே லாரி டிரைவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த தம்பி
  10. மதுரை மாநகர்
    மதுரை மாட்டுத்தாவணி காய் கனி வியாபாரிகள் பொதுக் குழுக் கூட்டம்..!