/* */

குன்னூர்-மேட்டுப்பாளையம் லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஜல்லி லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

குன்னூர்-மேட்டுப்பாளையம் லாரி கவிழ்ந்து விபத்து; போக்குவரத்து கடும் பாதிப்பு
X

கவிழ்ந்து கிடக்கும் லாரி.

நீலகிரி மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து கட்டுமான பணிகளுக்கு ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி பர்லியார் சோதனை சாவடி அருகே வரும்போது கட்டுபாட்டினை சாலையில் நடுவே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிர்ஷ்ட வசமாக டிப்பர் லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார். இதனால் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து முடங்கியது.

சாலையின் இருபுறமும் சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலை குறைக்க தற்காலிகமாக ஒரு வழி பாதையாக மாற்றம் செய்தனர்.

பின்னர் ஜேசிபி உதவியுடன் சாலையின் நடுவே கிடந்த லாரியை ஓரமாக தள்ளி வைத்தனர். பின்னர் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தால் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அத்யாவசிய பொருட்கள் மற்றும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட காய்கறிகள் சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் அதிக பாரம் ஏற்றி வரும் டிப்பர் லாரிகளால் இது போன்ற அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Updated On: 29 Aug 2021 3:02 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது