/* */

நீலகிரியிலுள்ள பூங்காக்களுக்கு தரச்சான்று

நீலகிரி பூங்காக்களுக்கு உலக தரக்கட்டுப்பாட்டு கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நீலகிரியிலுள்ள பூங்காக்களுக்கு தரச்சான்று
X

தரச்சான்றிதழ்களை வழங்கும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டமானது உலக அளவில் இயற்கை வளத்துக்கும், சுற்றுலா வளத்துக்கும் பெயர் போனது. இம்மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையானது விவசாயிகளுக்கு நலன் பயப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் துறையாகவும் இருந்து வருகின்றது.

இம்மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் கட்டுப்பாட்டில் 5 பூங்காக்கள் மற்றும் 10 தோட்டக்கலைப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இவை சுற்றுலாத்தலங்களாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு தரமான நடவுப்பொருட்கள் விநியோகிக்கவும் பயிற்சி திடல்களாகவும் செயல்படுகின்றது.

தற்பொழுது தோட்டக்கலைத் துறையின் கட்டுபாட்டிலுள்ள அரசு தாவரவியல்பூங்கா, அரசு ரோஜா பூங்கா, சிம்ஸ் பூங்கா மற்றும் அரசு தோட்டக்கலைப் பண்ணை,பர்லியார் ஆகியவை ISO எனப்படும் உலக தரக்கட்டுப்பாட்டு கழகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

அழகியல் மற்றும் தொழில் நுட்ப மேலாண்மைக்காக உதகை, அரசு தாவரவியல் பூங்காவிற்கும், பல்வேறு வகையான ரோஜா ரகங்களின் தொகுப்பு மற்றும் வளர்ப்பிற்காக உதகை, அரசு ரோஜாபூங்காவிற்கும், அயல்நாட்டு தாவரங்கள் மற்றும் பல்வேறு தாவரங்களின் தொகுப்பாக விளங்குவதற்காக குன்னூர், சிம்ஸ் பூங்காவிற்கும், தரமான நடவு பொருள் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கான தொழில் நுட்ப தளமாக விளங்குவதற்கா பர்லியார், அரசு தோட்டக்கலைப் பண்ணைக்கும் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இச்சான்றிதழ்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் மற்றும் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கி வாழ்த்துக் கூறினார்.

Updated On: 6 Sep 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  3. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  4. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  5. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...
  7. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்வரத்து 762 கன அடி
  8. வாகனம்
    வரே வா...வரப்போகுது ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450..! எக்கச்சக்க...
  9. இந்தியா
    மம்தா பானர்ஜிக்கு பாரத் சேவாஷ்ரம் சங்க துறவி நோட்டீஸ்
  10. டாக்டர் சார்
    அமைதியான எதிரி..! அமைதியான மாரடைப்பு..! உஷாரா இருக்கணும்ங்க..!