/* */

கேரட் விலை உயர்வு : நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி

கேரட் கிலோவிற்கு 60 முதல் 70 ரூபாய் வரை விற்பனையாவதால், நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் குன்னூர், உதகை மற்றும் கோத்தகிரி பகுதிகளில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறி விவசாயம் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றனர். காலநிலைக்கு ஏற்றவாறு கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட் என விவசாயிகள் பயிர்செய்து வருகின்றனர்.

இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், விற்பனைக்காக மேட்டுப்பாளையம், சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பபடுகிறது. குறிப்பாக மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு அதிகளவில் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

தற்போது, கேரட் பயிரிட்டு 5 முதல் 6 மாதம் வரை பயிர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் என அதிகளவில் செலவுகள் ஏற்படுவதால், சிறு குறு விவசாயிகள் கேரட் பயிரிட பெருமளவில் ஆர்வம் காட்டுவதில்லை. பல ஏக்கர் பரப்பில் நிலம் வைத்திருப்பவர்கள் மட்டுமே அதிக பரப்பளவில் கேரட் பயிரிட்டுள்ளனர்.

இந்நிலையில், மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியில் கேரட் கிலோவிற்கு 60 முதல் 70 ரூபாய் வரை , விலை உயர்ந்து விற்பனையாகிறது. கூடுதல் விலை கிடைப்பதால், கேரட் சாகுபடி செய்துள்ள நீலகிரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 14 July 2021 8:18 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ரெமல்' புயலாக...
  2. Trending Today News
    ஓடும் லாரியில் துணிச்சல் திருட்டு..! வீடியோ வைரல்..! (செய்திக்குள்...
  3. இந்தியா
    ராஜ்கோட் விளையாட்டு அரங்கத்தில் பயங்கர தீ விபத்து: 4 பேர்
  4. சோழவந்தான்
    உசிலம்பட்டி அருகே பத்ரகாளியம்மன் ஆலய திருவிழா: பக்தர்கள் பரவசம்..!
  5. திருத்தணி
    சோதனை சாவடி எல்லையில் உள்துறை செயலாளர் ஆய்வு
  6. கல்வி
    அறிவுக்கனிகளில் பங்கு கொடுத்த ஆசானை போற்றுவோம்..!
  7. குமாரபாளையம்
    பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு..!
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் ஆபத்தான மரக்கிளைகளை அகற்ற கோரிக்கை
  9. வீடியோ
    🔴LIVE : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பு ||...
  10. வீடியோ
    நான் பரமாத்மாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் | Modi பேச்சுக்கு...