/* */

நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் கோத்தகிரியில் ரத்ததான முகாம்

நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் கோத்தகிரியில் ரத்ததானம் முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் செய்தனர்.

HIGHLIGHTS

கொரோனா ஊரடங்கு காலத்தில், நீலகிரி சேவா கேந்திரத்தினர் பொது மக்களுக்கான உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளிலும் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாவட்ட நிர்வாகத்திற்கும் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கோத்தகிரியில் சேவா கேந்திரம் மூலம் ரத்த தானம் முகாம் நடைபெற்றது. இதில், பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் வந்து ரத்ததானம் செய்தனர் .

இத் குறித்து, நீலகிரி மாவட்ட சேவா கேந்திரம் ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் கூறுகையில், ஊரடங்கு காலத்தில், பொது மக்களுக்கான உணவு, காய்கறி மளிகை தொகுப்புகள், கபசுரக் குடிநீர் வழங்குதல் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்தல் உள்ளிட்ட சமூகப்பணிகளை செய்து வருகிறோம். ஊரடங்கு முடியும்வரை மக்களுக்கான இத்தகைய பணிகள் தொடரும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், கோத்தகிரி தாலுகா ஒருங்கிணைப்பாளர் ஹரி சுதன், நீலகிரி சேவா கேந்திர பொறுப்பாளர்கள் கணேஷ் வைபவ், பூவராஜன், குமார்,மகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Jun 2021 11:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்