/* */

கோத்தகிரி மருத்துவமனைக்குள் புகுந்த கரடி - பீதியடைந்த நோயாளிகள்

கோத்தகிரி அருகே, தனியார் மருத்துவமனையில் கரடி புகுந்ததால் ஊழியர்கள், நோயாளிகள் அச்சமடைந்தனர்

HIGHLIGHTS

கோத்தகிரி மருத்துவமனைக்குள் புகுந்த கரடி - பீதியடைந்த நோயாளிகள்
X

மருத்துவமனை வளாகத்தில் நடமாடிய கரடி.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் சமீப காலமாக கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோத்தகிரி அருகே மிஷன் காம்ப்பவுண்ட் பகுதியில், 24 மணி நேரமும் செயல்படும் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. வனப்பகுதியை ஒட்டி இம்மருத்துவமனை அமைந்துள்ள நிலையில், வனப்பகுதியில் இருந்து காட்டு மாடு, சிறுத்தை,கரடி போன்ற வனவிலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, தேயிலை தோட்டங்கள், சாலைகளில் உலா வருவது தற்போது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், நேற்றைய தினம் மருத்துவமனை வளாகத்தில் கரடி ஒன்று உலா வந்தது. இதனால், நோயாளிகள் பீதிக்குள்ளாகினர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்த வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் கரடி உலா வந்த சம்பவம், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 24 Nov 2021 2:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  5. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  6. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  8. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  10. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு