/* */

மழைக்கு பஸ் ஸ்டாப்பில் தஞ்சமடைந்த கரடி

கோத்தகிரியில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால், பேருந்து நிறுத்தத்தில் உள்ள நிழல் குடையில் பதுங்கிய கரடி.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டத்தில் உதகை ,கூடலூர், பந்தலூர், கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் நேற்று இரவு மிக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடும் குளிர் நிலவியது. அவ்வாறு நிலவிய கடும் குளிர் காலநிலையால் கரடி ஒன்று தேயிலை தோட்டத்தில் இருந்து வெளியேறி கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட கன்னிகா நகர் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிழற்குடை கட்டிடத்தில் பதுங்கியது.

அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், வாகனம் மூலம் கரடி அருகே சென்று பேருந்து நிலைய கட்டிடத்தில் பதுங்கியிருந்த கரடியை மீண்டும் தேயிலை தோட்டத்திற்குள் விரட்டினர். மழை, குளிருக்கு பயந்து கரடி ஒன்று பேருந்து நிழற்குடைக்குள் பதுங்கியது காட்சி சமூக வலைதளங்களில் பரவலாக பரவி

வருகிறது.

Updated On: 19 Nov 2021 4:17 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  6. பூந்தமல்லி
    திருவேற்காட்டில் குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு: கண்ணில் கருப்பு துணி...
  7. நாமக்கல்
    கொல்லிமலை அருவிகளில் குளிக்கத் தடை: சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
  8. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  9. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது