/* */

ஹெலிகாப்டர் விழுந்த பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு

நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்கள் ஒரு ஆண்டுக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற அனுமதி.

HIGHLIGHTS

ஹெலிகாப்டர்  விழுந்த பகுதியில் ராணுவ உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு
X

தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் கடந்த எட்டாம் தேதி காலை 12.30 மணியளவில் கோவையிலிருந்து முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 பேர் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டர் கடுமையான மேகமூட்டம் காரணமாக குன்னூர் அருகே நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் விபத்துக்குள்ளானது.

அப்போது விபத்தில் சிக்கி தீயில் கருகிய முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 14 ராணுவ வீரர்களை மீட்பதற்காக நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்கள் பல்வேறு உதவிகளை மேற்கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று பிற்பகல் நஞ்சப்பன் சத்திரம் பகுதிக்கு நேரில் சென்ற தென் பிராந்திய தலைமை அலுவலர் லெப்.ஜெனரல் ஏ.அருண், ஹெலிகாப்டர் விபத்தில் உதவி மேற்கொண்டு நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்களுக்கு இரு கைகளை வணங்கி தனது நன்றியினை தெரிவித்தார்.

இதன்பின் நஞ்சப்பன் சித்திரம் பகுதி மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, காய்கறிகள் மற்றும் கம்பளி போன்ற உதவிகளை வழங்கிய லெப்.ஜெனரல் ஏ.அருண் நஞ்சப்பன் சத்திரம் பகுதி மக்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில், நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் உதவி மேற்கொண்ட கிராம மக்கள் அனைவருக்கும் ஒரு ஆண்டிற்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார். மாதம் தோறும் நஞ்சப்பன் சத்திரம் பகுதியில் இலவசமாக ராணுவ மருத்துவர்களைக் கொண்டு ஒரு ஆண்டிற்கு மருத்துவ முகாம் நடைபெறும் என்றார்.

முன்னதாக பேட்டி அளித்த லெப்.ஜெனரல் ஏ.அருள், ஹெலிகாப்டர் விபத்தில் உயிருடன் மீட்கப்பட்ட வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறினார்.

Updated On: 13 Dec 2021 12:55 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?