/* */

குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
X

நீலகிரி மாவட்டம் குன்னூர் குடியிருப்பில் குளியலறையில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குன்னூர் வெலிங்டன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இன்று இவரது குழந்தை குளியலறைக்கு செல்லும் போது மேற்கூரையில் பாம்பு ஒன்று இருந்துள்ளதை கண்டு வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். உடனே அங்கு சென்று பார்க்கும் போது பாம்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனே குன்னூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் குளியலறைக்குள் புகுந்த பாம்பை சுமார் அரை மணி நேரம் போராடி பிடித்தனர். பிடிபட்ட பாம்பு சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். குளியலறைக்குள் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 8 March 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு