/* */

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் இன்று தொடங்கும் 64 ஆவது பழ கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க 2000 கிலோ திராட்சைகளால் பிரம்மாண்ட கிங்காங் வடிவம் அமைக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழ கண்காட்சி
X

குன்னூர் சிம்ஸ் பூங்கா பழக் கண்காட்சி 

சிம்ஸ் பூங்கா துவங்கி 150 வது ஆண்டை கொண்டாடும் வகையில் 150 பழவகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக இரண்டு நாட்கள் நடைபெறும் பழக்க கண்காட்சி முதன்முறையாக இந்த ஆண்டு இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது .

நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சிகள் மற்றும் பழக்கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது,

இந்த ஆண்டு ராேஜா கண்காட்சி நிறைவடைந்த நிலையில் இன்று குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64ஆவது பழக்கண்காட்சி தொடங்குகிறது.

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் விதமாக சிம்ஸ் பார்க் உருவாகி 150 வது ஆண்டை குறிக்கும் வகையில் சிறப்பம்சமாக குழந்தைகளை கவரும் விதமாக 15 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட 2000 கிலோ திராட்சை பழங்களால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்ட கிங்காங் உருவம், இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் " GO ORGANIC" போன்ற வடிவமைப்புகள் பழங்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன,

இது மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி, தேனி, கொடைக்கானல், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தோட்டக்கலைத் துறையினர் கண்காட்சியில் பங்கு கொண்டுள்ளனர்.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64 ஆண்டுகளில் முதன்முறையாக இந்த ஆண்டு மூன்று நாட்கள் இந்த பழ கண்காட்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 May 2024 10:45 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு