Begin typing your search above and press return to search.
முதுமலை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் பயிற்சி முகாம்
தென் பிராந்திய புலி மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி பட்டறை முதுமலை தெப்பக்காடு முகாமில் இன்று தொடங்கியது.
HIGHLIGHTS
தென் பிராந்திய புலி மதிப்பீட்டாளர்களுக்கான பயிற்சி பட்டறை இன்று முதுமலை தெப்பக்காடு முகாமில் தொடங்கியது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் நடைபெறும் இந்த 3 நாள் பயிற்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா மாநிலங்களைச் சார்ந்த துணை இயக்குநர்கள், வனசரகர்கள், தாவிரவியலாளர்கள் 89 பேர் பங்கேற்றுள்ளனர். புலிகளை மதிப்பீடு செய்யும்போது மேற்கொள்ள வேண்டிய பல்வேறு யுத்திகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பயிற்சி பட்டறையை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கெளசால் தொடங்கி வைத்தார்.