/* */

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தொடர்ந்து பாடந்துறை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
X

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து அக்கிராம மக்கள் இன்று அதிகாலை கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். அப்போது யானையை விரட்ட வேண்டும் எனவும் காட்டு யானையை பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறை, வருவாய் துறையினர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் யானையை விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 13 Nov 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ரத்ததானம் வழங்கல்
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  4. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  5. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  6. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  7. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  8. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  9. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்