கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
X

ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் ஓணம் பண்டிகை திருநாள் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஓணம் திருநாள் பண்டிகை கொண்டாடப்பட்டது.

நாளை மறுநாள் மலையாள மக்களின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. விதவிதமான பூக்களால் கோலமிட்டு இந்தப் பண்டிகையை கொண்டாடுவர். இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுனில் மற்றும் கூடலூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி தலைமையில் ஓணம் பண்டிகை திருநாள் கொண்டாடப்பட்டது. இதில் தூய்மைப் பணியாளர்கள் அலுவலர்களுக்கு புத்தாடை கொடுத்து ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இதில் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future