/* */

கூடலூர் கொரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு? ஆய்வுக்கு வந்த அதிகாரியுடன் நோயாளிகள் வாக்குவாதம்

கூடலூர் அரசு கலைக் கல்லூரி கொரோனா சிகிச்சை மையத்தில், நோயாளிகள் தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா தாக்கம் பரவலாக உள்ளது. அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கூடலூர் அரசு கலைக்கல்லூரியில், சுமார் 235 படுக்கைகள் உள்ளன. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள் உள்ளன.

இந்தலையில், இன்று அரசு கலைக்கல்லூரியில் உள்ள நோயாளிகள், அங்கு தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாக, அங்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அரசு கலைக்கல்லூரியில் இருக்கக்கூடிய நோயாளிகள் தங்களுக்கு தரமற்ற உணவு வழங்குவதாகவும், இதுபற்றி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை எனவும் கூறினர்.

ஆய்வுக்கு வந்த அதிகாரிகளிடம், தரமற்ற உணவு குறித்து புகார் செய்து நோயாளிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 12 Jun 2021 4:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...