/* */

கண்ணில் பட்டும் கிரேட் எஸ்கேப் ஆன புலி

கூடலூர் அருகே அட்டகாசம் செய்து வரும் புலி இன்று கண்ணில் தென்பட்டும் பிடிக்க முடியாமல் போனதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கண்ணில் பட்டும் கிரேட் எஸ்கேப் ஆன புலி
X

சுற்றித்திரியும் புலி.

கூடலூர் அருகே கடந்த 4 நாட்களாக தேவன் எஸ்டேட் பகுதியில் உலா வரும் புலி கால்நடைகளை அடித்துக் கொன்று வருகிறது. இதற்காக புலியை பிடிக்க வனத்துறை குழுவும், மருத்துவக் குழுவும் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது தேயிலை தோட்டத்தில் உலா வந்த புலி கண்ணிமைக்கும் நேரத்தில் கிரேட் எஸ்கேப் ஆனது. தொடர்ந்து புலியை கண்காணிக்கும் பணியில் கேரளாவில் இருந்து வந்திருக்கும் வனக்குழுவும், தமிழக வனத்துறையும் ஈடுபட்டு வருகின்றனர். கண்ணில் பட்டும் புலியை பிடிக்க முடியாத நிலையில், மீண்டும் புலி கண்ணில் தென்படுமா என வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.

Updated On: 27 Sep 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  2. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  3. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  7. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!