வனத்துறையினர் மற்றும் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டு யானையால் பரபரப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை வன எல்லைக்குட்பட்ட பந்திப்பூர் வனப்பகுதியில் சாபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம்
நீலகிரி மாவட்டம் முதுமலை வன எல்லைக்குட்பட்ட பந்திப்பூர் வனப்பகுதியில் சாபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டியே கர்நாடக மாநில பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் முதுமலையில் உள்ள வாகன சாபாரி போலவே கர்நாடக மாநில பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் வாகன சாபாரி சுற்றுலா பயணிகளுக்கு உள்ளது.
அதுசமயம் நேற்று மாலை சுமார் நான்கு மணிக்கு மேல் முதுமலை வன எல்லைக்குட்பட்ட கர்நாடகா,தமிழக வன எல்லை பகுதியில் கர்நாடக மாநில வனத்துறை வாகனம் மூலம் வனப்பகுதிக்குள் நான்கு சுற்றுலா பயணிகளுடன் வனப்பகுதிக்குள் சபாரி அழைத்து செல்லப்பட்டனர். அப்போது வனப்பகுதிக்குள் இருந்து திடீரென ஒரு யானை சஃபாரி சென்ற வாகனத்தை துரத்த ஆரம்பித்தது.உடனே சுதாரித்துக்கொண்டு ஜீப்பை இயக்கிய வாகன ஓட்டி தனது சாதுரியத்தால் பின்னோக்கி நீண்ட தூரம் வாகனத்தை இயக்கினார்.
பெரும் அச்சத்துடன் சபாரி வாகனத்தில் பயணித்த சுற்றுலா பயணி தனது கைப்பேசி மூலம் இந்த வீடியோவை காட்சி படுத்தியுள்ளார். திறம்பட வாகனத்தை இயக்கிய வாகன ஓட்டுநரின் சாதுரியத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வனப்பகுதியில் சபாரி சென்ற வாகனத்தை யானை துரத்திய சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu