/* */

கொரோனா பீதி: நீலகிரி முதுமலையில் யானைகள் சவாரி மீண்டும் ரத்து

கொரோனா பரவல் காரணமாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைசவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொரோனா பீதி: நீலகிரி முதுமலையில் யானைகள் சவாரி மீண்டும் ரத்து
X

கோப்பு படம்

கொரோனோ பெருந்தொற்று காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாமில், சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படாமல் இருந்தது. இங்கு நாள்தோறும் யானைகள் சவாரி நடைபெறுவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. கடந்த வாரம் யானைகள் முகாமில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு, யானைகள் சவாரியும் துவங்கியது. இதனால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், மீண்டும் இன்றுமுதல் யானைகள் சவாரி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது கொரோனோ மற்றும் நிபா வைரஸ் எதிரொலியாக, யானைகள் பாதுகாப்பு கருதியும், அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் தொற்று பரவாமல் இருக்க, யானைகளின் பாதுகாப்பு கருதியும், சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Updated On: 11 Sep 2021 3:07 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  3. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...
  4. திருவண்ணாமலை
    இன்று முதல் இயக்கப்படவிருந்த திருவண்ணாமலை சென்னை ரயில் திடீர் ரத்து
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  7. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  9. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  10. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...