/* */

கூடலூர் சேரம்பாடி பகுதியில் பழக்கடையை சூறையாடிய யானை

சேரம்பாடி பகுதியில் உள்ள பழக்கடையை சூறையாடிய காட்டு யானையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்

HIGHLIGHTS

கூடலூர் சேரம்பாடி பகுதியில் பழக்கடையை சூறையாடிய யானை
X

நீலகிரி மாவட்டம் சேரம்பாடியில் இருந்த பழக்கடையை  நேற்று இரவில் சூறையாடிய காட்டு யானை

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி நகர் பகுதியில் இரவில் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கிருந்த பழக் கடையை சூறையாடியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

கூடலூர் , பந்தலூர், சேரம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சமீபகாலமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. குடியிருப்புகளையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு சேரம்பாடி நகர் பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை கொட்டும் மழையில் நனைந்தபடி பழ கடையை சூறையாடியதுடன் அங்கிருந்த வாழைத்தாரை எடுத்துச் சென்றது. அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதையடுத்து யானை வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து அட்டகாசம் செய்யும் யானையை வனத்துறையினர் அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Updated On: 21 Nov 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!