/* */

கூடலூர் அரிசி ராஜா காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வாசிம், சீனிவாசன் ஆகிய இரண்டு கும்கி யானைகள் 2 ம் நாளாக வரவழைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

கூடலூர் அரிசி ராஜா காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு
X

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் அரிசி ராஜா காட்டு யானை.

கூடலூரை அடுத்துள்ள தேவர்சோலை, பாடந்துறை, புளியம்பாறை, நாடுகாணி, தேவாலா அட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சுற்றித்திரியும் அரிசி ராஜா என்ற காட்டு யானை அடிக்கடி வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருகிறது.

வீடுகளை உடைத்து வீட்டில் உள்ள அரிசி, பருப்பு உள்ளிட்ட தானியங்களை உண்டு பழகிய இந்த யானையை வனத்துறையினர் எவ்வளவு விரட்டினாலும் வனப்பகுதிக்குள் செல்லாமல் மீண்டும் ஊருக்குள் வருவதை வழக்கமாக கொண்டுள்ளது.

யானையை கண்காணிப்பதற்காக வனத்துறை சார்பில் கும்கி யானைகள் கிராம எல்லைகளில் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த போதிலும் வேறு வேறு இடங்களை மாற்றி வனத்துறையை ஏமாற்றி வீடுகளை உடைத்து சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளது அரிசி ராஜா என்ற காட்டு யானை.

ஆதிவாசி பழங்குடியின மக்கள் விவசாயிகள் இந்த யானையால் வீடுகளை இழந்து பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த யானையால் உடைக்கப்படும் வீடுகளுக்கு இழப்பீடு கிடைப்பது இல்லை எனவும்,எனவே இந்த குறிப்பிட்ட அரிசி ராஜா என்ற யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் அல்லது முதுமலை வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது தொடர்பாக பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் போராட்டங்கள் நடத்தியும் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பாடந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு உள்ள யானை தினசரி ஒரு வீட்டை இடித்து வருகிறது. எனவே வீடுகளை உடைத்து பழகிய இந்த யானையை வனத்துறையினர் பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து முதல் கட்டமாக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களின் கண்டனத்தை தெரிவித்த நிலையில்,தங்களது கோரிக்கையை ஏற்று இந்த யானையை பிடித்து செல்லாவிட்டால் மேலும் அடுத்த கட்ட போராட்டங்கள் தொடரும் என பொது மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அரிசி ராஜா காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகளுடன் 2 ம் நாளாக இன்றும் வனத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

Updated On: 16 Dec 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!