/* */

கூடலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி: கிராம மக்கள் பீதி

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில், பசு மாட்டை தாக்கி கொன்ற புலியால், கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே புலி தாக்கி பசு மாடு பலி: கிராம மக்கள் பீதி
X

கூடலூர் அருகே, புலியால் தாக்கப்பட்டு இறந்த பசுமாடு.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை அம்பலமூலா பகுதியில், கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இருந்து வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும், சுமார் 6 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை, புலி அடித்துக் கொன்றுள்ளது. இந்நிலையில், தற்போது மீண்டும் அதோபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

அம்பாலா பகுதியில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்த பசு மாட்டை, புலி தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தோடு இருந்து வருகின்றனர். ஏற்கனவே இதுபற்றி வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டும், வனத்துறை அமைச்சர் அதற்கென தனி குழு அமைக்கப்பட்டு புலியை கூண்டு வைத்து பிடிக்கப்படும் என்று, கூறியிருந்தார்.

இந்நிலையில், மீண்டும் இந்த பகுதியில் புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், வெளியே சென்றுவர அச்சம் அடைந்துள்ளதாகக் கூறியுள்ள கிராம மக்கள், தாமதமின்றி வனத்துறையினர் கூண்டு வைத்து புலியை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Sep 2021 5:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  2. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  7. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  8. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  9. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு